நடிகையும் இயக்குநரான லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பற்றி பல சர்ச்சைகள் வருவதுண்டு. நிகழ்ச்சியில் மக்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை உலகிற்கு காட்டி பணம் சம்பாதிக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது.
இதுபற்றி அவர் கூறுகையில், ”மருத்துவர் ஆலோசனை சொல்வது போல தான் நாங்கள் செய்கிறோம். ஆனால் இதை தொலைக்காட்சியில் போடுவோம் என்று எல்லாம் தான் தெரிஞ்சு தான் மக்கள் வருகிறார்கள். யாரையும் நாங்கள் கூட்டி வருவதில்லை. அவர்களாகவே தான் விரும்பி வருகிறார்கள். இதை வியாபாரம் என்று சொல்லாதீர்கள், மருத்துவர் நோயை குணப்படுத்த பணம் வாங்குவதால் அதை வைத்து வியாபாரம் செய்கிறார் என்று கொச்சைப்படுத்த முடியுமா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்குவதற்காக சில இசையை சேர்த்து ப்ரோமா செய்கிறார்கள் என்பது உண்மை தான். இது தொண்டு நிறுவனம் அல்ல, நான் பணம் வாங்கிக்கொண்டு தான் நிகழ்ச்சி செய்கிறேன். ஆனால் சமூக பொறுப்போடு தான் இதை செய்கிறேன், என்றும் அவர் கூறினார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...