தற்கொலை செய்துக் கொண்ட பிரபல தெலுங்கு காமெடி நடிகர் விஜய் சாய், தற்கொலை செய்துக் கொள்வதற்கு முன்பாக எடுத்துக் கொண்ட செல்பி வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சித்தார்த், ஜெனிலியா நடித்த பொம்மரிலு உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்தவர் காமெடி நடிகர் விஜய் சாய். அவர் ஹைதராபாத்தில் உள்ள ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை அவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார் விஜய். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பணக் கஷ்டத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
விஜய் சாய்க்கும், அவரது மனைவிக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. அவரின் முன்னாள் மனைவி அவரை டார்ச்சர் செய்து பணம், நகை ஆகியவற்றை பறித்துக் கொண்டாராம்.
விஜய் சாயை அவரது மகளை பார்க்காவிடாமல் அவரின் முன்னாள் மனைவி கொடுமைப்படுத்தினாராம். மேலும் ஆட்களை அனுப்பி விஜய் வைத்திருந்த மாருதி ஸ்விப்ட் காரையும் எடுத்துச் சென்றுவிட்டாராம் அந்த பெண்.
விஜய் நேற்று காலை 4 மணி முதல் 5 மணிக்குள் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. தற்கொலை செய்யும் முன்பு அவர் தனது செல்போனில் செல்ஃபி வீடியோ எடுத்துள்ளார். அதில் தனது சாவுக்கு காரணம் முன்னாள் மனைவி, அவரின் வழக்கறிஞர், இயக்குனர் சசிதர் என்று கூறியுள்ளாராம்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...