சமீபகாலமாக பாலியல் கொடுமைக்கு ஆளானது பற்றி பல நடிகைகள் வெளிப்படையாக பேசி வருகிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி சினிமாக்களிலும் நடிகைகளுக்கு இத்தகைய அனுபவங்கள் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழில் ராதிகா, கஸ்தூரி போன்றவர்கள் தாங்கள் பாலியல் கொடுமைக்கு ஆளானதாக கூறினார்கள். அதேபோல் இந்தியில் வித்யா பாலன், கங்கனா ரனவத், ராதிகா ஆப்தே உள்ளிட்ட பல நடிகைகளும் தங்களது பாலியல் பாதிப்புகளை வெளிப்படையாக கூறினார்கள். ஆனால், இவர்கள் யாரால் பாதிக்கப்பட்டார்கள் என்பதை மட்டும் கூறவில்லை.
இந்த நிலையில், ’கேங்ஸ் ஆப் வஸ்சேபர்’ படத்தில் நடித்த ரிச்சா சட்டா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பட்டியலை வெளியிடப் போவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதே சமயம், தனது குடும்பத்தினருக்கு எதுவும் ஆகாது, என்று பாதுகாப்பு உறுதி அளித்தால் தான், பட்டியலை வெளியிடுவேன், என்று கூறியவர், நான் பட்டியலை வெளியிட்ட பிறகும் எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வழங்கப்படும், என்று உறுதியளிக்க வேண்டும், என்றும் தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...