‘விவேகம்’ படத்திற்கு பிறகு அஜித்தின் படத்தை இயக்கப் போவது யார்? என்ற கேள்விக்கு அஜித் சமீபத்தில் பதில் அளிக்குமாறு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, தொடர்ந்து 4 வது முறையாக சிவா அஜித்துடன் இணைகிறார்.
அஜித் ரசிகர்களுக்கு இது கொஞ்சம் கசப்பான செய்தியாக இருந்தாலும், இந்த முறை சிவா ரொம்பவே எச்சரிக்கையாக இருப்பார், என்ற நம்பிக்கையும் உள்ளது. அதற்கு ஏற்றவாறு அஜித்தின் லுக் மற்றும் கதைக் களம் ஆகியவற்றில் சிவா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ரசிகர்களுக்கு திருப்திகரமாகவே உள்ளது.
இப்படம் அரசியல் கதைக்களத்தை கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்க, இதில் அஜித்துக்கு வில்லனாக நடிகர் அரவிந்த் சாமி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
‘தனி ஒருவன்’ படத்தில் தனது அழகிய வில்லத்தனத்தால் மிரட்டிய அரவிந்த் சாமி, தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருவதால், வில்லனாக நடிப்பதில்லை என்ற முடிவில் இருந்தாலும், அஜித்துக்காக தனது முடிவை மாற்றிக் கொண்டு வில்லன் வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...