தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிகைகளுக்கும் பேட்டி கொடுப்பதை தவிர்த்து வந்த நடிகர் மயில்சாமி, சமீபகாலமாக டிவி-க்களில் நடக்கும் அரசியல் சார்ந்த விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
மேலும், ஜெயலலிதா மரணம் குறித்தும் சில சர்ச்சையான கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர், டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க வீடு வீடாக சென்று மக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில், நடிகர் மயில்சாமி புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும், அந்த கட்சிக்கு தே.ப.பா.க என்று பெயர் வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்றாலும், இது தொடர்பான போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இது உண்மையிலேயே மயில்சாமியில் புதிய அரசியல் கட்சியா அல்லது திரைப்படத்திற்காக அச்சடிக்கப்பட்ட விளம்பர போஸ்டாரா? என்ற சந்தேகமும் உள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...