‘டிக் டிக் டிக்’ படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் அடுத்தப் படத்திற்கு ‘அடங்க மறு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சரண், மிஸ்கின், அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் தங்கவேல் இயக்கும் இப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் பிரைவேட் லிமிடேட் தயாரிக்கின்றது.
ஜெயம் ரவிக்கு இணையாக ராஷி கண்ணா நடிக்கும் இப்படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்ய, விஜி வசனம் எழுதுகிறார். லால்குடி இளையராஜா கலையை நிர்மாணிக்க, ஸ்டண்ட் சிவா ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார். பிருந்தா நடனம் அமைக்கிறார்.
இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கிய இப்படம் குறித்து தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் கூறுகையில், “மக்களின் பேராதரவோடு எங்கள் நிறுவனம் சின்னத்திரை தயாரிப்பில் இவ்வளவு காலமாக பெரும் வெற்றி பெற்று நன்பெயரை சம்பாதித்துள்ளது. இந்த வெற்றி பயணத்தை இந்த படம் மூலம் சினிமாவிலும் தொடர முனைப்போடு உள்ளோம்.
இப்படத்தில் ஜெயம் ரவியுடன் பணியாற்றுவதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. 'மாஸ்' மற்றும் 'கிளாஸ்' என இரண்டு தரப்பினரும் ரசிக்கும் நடிகர் அவர். இப்பட இயக்குநர் கார்த்திக் தங்கவேலுக்கு இது முதல் படமாக இருந்தாலும் உதவி இயக்குநராக பெருமளவு அனுபவம் பெற்றவர். கதாநாயகியாக நடிப்பவர் ராஷி கண்ணா. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இந்த புதிய தொடக்கத்தின் மூலம் பல புதிய திறமைகளை ஆதரவளித்து அவர்களோடு பணியாற்ற முனைப்போடு உள்ளோம்.” என்றார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...