தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன், நடிகர் விஜய் செய்வதை காப்பியடிப்பதாக சிலர் கூறி வருகின்றனர். படங்களில் மட்டும் அல்லாமல், படம் தொடர்பான நிகழ்ச்சிகளையும் விஜய் செய்வது போலவே அவர் செய்வதாகவும் கூறப்படுகிறது.
அதாவது, ‘வேலைக்காரன்’ படம் முடிந்ததும், படத்தில் பணி புரிந்தவர்களுக்கு சிவகார்த்திகேயன் பேர்வல் பார்ட்டி கொடுத்தார். இதையும், அவர் விஜயை பார்த்து காப்பியடித்து விட்டார், என்று சிலர் கூறினார்கள்.
இதற்கு விளக்கம் அளித்த சிவகார்த்திகேயன், ”சரியான விஷயத்தை தான் விஜய் சார் செய்வார். அவர் செய்துவிட்டார் என்பதற்காக நான் செய்யாமல் இருப்பது தான் தவறு. அவரை பின்பற்றி தான் நான் இதையெல்லாம் செய்கிறேன் என தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...