தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள சமந்த, இளம் வயதிலேயே காதல் வயப்பட்டு திருமண வாழ்க்கையிலும் நுழைந்துவிட்டார். இருந்தாலும், திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளவர், இயக்குநர்களிடம் தொடர்ந்து கதையும் கேட்டு வருகிறார்.
இதற்கிடையே, திருமணமான முதல் நாள், தனது முதல் இரவு அறையையின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சமந்தாவுக்கு, புகுந்தவீட்டில் செம டோஸ் கிடைத்ததாம். மாமனாரின் கோபத்திற்கு ஆளான சமந்தா, நடிப்புக்கு முழுக்கு போடும் சூழலும் உருவானதாம்.
உடனடியாக தனது கணவர் மூலம், தனது புகுந்த வீட்டாரிடம் மன்னிப்பு கேட்ட சமந்தா, ”இனி கிளாமராக நடிக்க மாட்டேன்”என்று சத்தியம் செய்தாராம். அதனை தொடர்ந்தே அவர் தொடர்ந்து நடிப்பதற்கான அனுமதி கிடைத்ததாம்.
கெளபாய்ஸ், நாடோடி வீரர்கள், கோஸ்ட்பஸ்டர்ஸ் அல்லது புதையல் வேட்டையாடுபவர்கள் பற்றிய படங்களே பொதுவாக சாகச படங்களாகக் கருதப்படுகின்றன...
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வா முரளியின் சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘நேசிப்பாயா’...
‘டிஎன்ஏ' படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததில் இருந்தே அதன் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர்...