முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான அஞ்சலி, குடும்ப பிரச்சினை காரணமாக சில ஆண்டுகள் தமிழ்ப் படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க தொடங்கியுள்ள அவர், விரைவில் நடிகர் ஜெய்யை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய்யும், அஞ்சலியும் ஒரே வீட்டில் கணவன் மனைவி போல வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதனை நிரூபிக்கும் வகையில் சமையல் அறையில் இருவரும் ஒன்றாக இருப்பது போலவும், அஞ்சலி ஜெய்க்கு உணவு பறிமாறுவது போன்ற புகைப்படங்களும் வெளியானது.
இந்த நிலையில், அஞ்சலி - ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பலூன்’ படத்தின் பிரஸ் மீட்டுக்கு வந்த அஞ்சலியிடம் திருமணம் குறுத்து கேட்ட போது, “ஜெய்யும் மீண்டும் இணைந்து நடித்திருக்கிறேன். நல்ல கதாபாத்திரம் என்பதால் நடித்தேன்.
எங்கு என்றாலும் எப்போது திருமணம் என்று கேட்கிறார்கள். இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளூம் யோசனை இல்லை. நல்ல நல்ல படங்களில் நடித்து தேசிய விருது வாங்க வேண்டும், என்பது மட்டும் தான் எனது ஆசை.
2018 ஆம் ஆண்டு பிஸியாக இருக்கிறேன், நிறைய படங்கள் கையில் இருக்கின்றன. அதனால், தற்போது எனது முழு கவனமும் நடிப்பில் மட்டுமே இருக்கும்.” என்றார்.
நடிகர் பிருத்வி அம்பர் நடிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படமான ‘செளகிதார்’ படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள பந்தே மகாகாளி கோவிலில் சிறப்பான பூஜையுடன் தொடங்கியது...
‘கூழாங்கல்’ படத்தை தயாரித்த லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் (Learn & Teach Productions) நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற மற்றொரு யதார்த்தமான படத்துடன் சினிமா ரசிகர்களை கவரத் தயாராக உள்ளது...
2012 ஆம் ஆண்டு வெளியான ‘ஆச்சரியங்கள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான தமன்குமார், ‘சட்டம் ஒரு இருட்டறை’, ’தொட்டால் தொடரும்’, ‘சேது பூமி’ உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்ததோடு, ‘அயோத்தி’ உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்திருக்கிறார்...