பிக் பாஸ் மூலம் பிரபலமான ஓவியாவுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைத்தாலும், அவர் கேட்கும் சம்பளத்தால் தயாரிப்பாளர்கள் தலைதெறிக்க ஓடுகிறார்களாம். இதனால், தற்போதுவரை ஓவியா ‘காஞ்சனா 3’ படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இப்படத்தை தவிர வேறு எந்த படங்களும் அவர் கையில் இல்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே ஞானவேல்ராஜா தயாரிப்பில் டிகே இயக்கும் ‘காட்டேரி’ படத்தில் தெலுங்கு நடிகர் சாய் மகன் ஆதி ஹீரோவாகவும், ஓவியா ஹீரோயினாகவும் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இப்படத்தில் ஆதிக்கு பதிலாக வைபவ் ஹீரொவாக்கப்பட்டதோடு, ஓவியாவுக்கு பதில் ஹன்சிகாவை ஹீரோயினாக்கியுள்ளனர்.
பட வாய்ப்புகள் குறைந்து வருவதால் தனது சம்பளத்தை குறைத்துக் கொண்ட ஹன்சிகா, தற்போது யாருக்கு ஜோடியாகவும் நடிக்க சம்மதம் தெரிவித்து வருகிறாராம்.
நடிகர் பிருத்வி அம்பர் நடிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படமான ‘செளகிதார்’ படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள பந்தே மகாகாளி கோவிலில் சிறப்பான பூஜையுடன் தொடங்கியது...
‘கூழாங்கல்’ படத்தை தயாரித்த லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் (Learn & Teach Productions) நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற மற்றொரு யதார்த்தமான படத்துடன் சினிமா ரசிகர்களை கவரத் தயாராக உள்ளது...
2012 ஆம் ஆண்டு வெளியான ‘ஆச்சரியங்கள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான தமன்குமார், ‘சட்டம் ஒரு இருட்டறை’, ’தொட்டால் தொடரும்’, ‘சேது பூமி’ உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்ததோடு, ‘அயோத்தி’ உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்திருக்கிறார்...