பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான டிடி, தற்போது திரைப்படங்களில் நடிப்பதிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையே திருமணமாகி ஒரு சில ஆண்டுகளிலேயே தனது கணவரை பிரிய டிடி விவாகரத்தும் கேட்டிருக்கிறார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை டிடி திருமணம் செய்துக் கொண்டார். இரு வீட்டார் சம்மதத்தோடு இந்த திருமணம் நடைபெற்றாலும், திருமணத்திற்கு பிறகு டிடி தொகுப்பாளினியாக பணியாற்றுவது ஸ்ரீகாந்த் குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லையாம். மேலும், டிடி திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியது, அவரது மாமியார் குடும்பத்தாரை ஆத்திரப்பட வைத்ததாம்.
அவர்கள் எவ்வளவும் சொல்லும், டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மற்றும் படங்களில் நடிப்பதை டிடி நிறுத்தவில்லையாம். இதனிடையே ஸ்ரீகாந்துக்கும் டிடி க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்த நிலையில், நேற்று முறைப்படி நீதிமன்றத்தில் டிடி விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் பிருத்வி அம்பர் நடிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படமான ‘செளகிதார்’ படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள பந்தே மகாகாளி கோவிலில் சிறப்பான பூஜையுடன் தொடங்கியது...
‘கூழாங்கல்’ படத்தை தயாரித்த லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் (Learn & Teach Productions) நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற மற்றொரு யதார்த்தமான படத்துடன் சினிமா ரசிகர்களை கவரத் தயாராக உள்ளது...
2012 ஆம் ஆண்டு வெளியான ‘ஆச்சரியங்கள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான தமன்குமார், ‘சட்டம் ஒரு இருட்டறை’, ’தொட்டால் தொடரும்’, ‘சேது பூமி’ உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்ததோடு, ‘அயோத்தி’ உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்திருக்கிறார்...