ஷங்கரின் ‘பாய்ஸ்’ படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமனா ஜெனிலியா, தனது குறும்புத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். விஜய், தனுஷ், ஜெயம் ரவி என்று முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்தார்.
இதற்கிடையே, இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ஜெனிலியா நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார். தற்போது இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளன.
இந்த நிலையில், ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷின் 40 வது பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது ஜெனிலியா தனது கணவருக்கு ரூ.1.5 கோடி மதிப்புள்ள டெச்லா மாடல் எக்ஸ் (Tesla Model X) என்ற காரை பரிசளித்தார்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரித்தேஷ், “என் மனைவி கொடுத்த இந்த பரிசை பார்த்ததும் 40 வயதான நான் 20 வயது இளைஞனை போல மகிழ்ச்சியில் துள்ளினேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இப்போ புரிந்ததா, தனது கணவரின் வயதை ஜெனிலியா எப்படி குறைத்தார் என்று.
அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...
எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...
விஜய் மில்டன் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கிறார்...