ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து வரும் ரஜினிகாந்த், இன்று மூன்றாவது நாளாக ரசிகர்களை சந்தித்தார். இன்று மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்ட ரசிகர்கள் பங்கேற்றனர்.
ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினிகாந்த், ”ரசிகர்களுக்கு கிடா வெட்டி சோறு போட ஆசை உள்ளது. ஆனால் ராகவேந்திரா மண்டபம் சைவம் என்பதால், வேறு இடத்தில் எனது ஆசையை நிறைவேற்றுவேன்.
ரசிகர்கள் எனது காலில் விழ வேண்டாம். கடவுள், தாய், தந்தை, பெரியோர்கள் காலில் மட்டுமே விழ வேண்டும்.
பணம், பெயர், புகழ், அதிகாரம் உள்ளவர்கள் காலில் விழ வேண்டும் என்று அவசியமில்லை.
மதுரை என்றாலே வீரத்துக்கு அடையாளம். உங்களைப் போலவே சிறுவயதில் நடிகர் ராஜ்குமாரின் ரசிகனாக இருந்தேன்.” என்று தெரிவித்தார்.
கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் விளம்பர பணிகளை லைகா நிருவனம் மிக பிரமாண்டமான முறையில் செய்து வருகிறது...
ஜாக்கி ஷெராப், பிரியாமணி, சன்னி லியோன் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘கொட்டேஷன் கேங்’...
சந்திரசுதா ஃபிலிம்ஸ் சார்பில் பி...