’அட்டகத்தி’ மூலம் ஹீரோவான தினேஷ் ‘குக்கூ’, ‘திருடன் போலீஸ்’ என்று தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்தாலும் ‘விசாரணை’ படத்திற்கு பிறகு காணாமல் போய்விட்டார். அதன் பிறகு அவர் நடித்த ‘ஒரு நாள் கூத்து’ எதிர்ப்பார்த்த அளவு வெற்றி பெறாததால் தினேஷ் ஒரு வெற்றிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.
தினேஷ் அதிகமகா நம்பியிருந்த ‘உள்குத்து’ படமும் வெளியாவதில் பல சிக்கல்களை சந்தித்து வந்த நிலையில், நாளை (டிச.29) இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ‘உள்குத்து’ தினேஷுக்கு திருப்புமுனையாக அமையும் வகையில் உள்ளதாக படம் பார்த்த பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
’திருடன் போலீஸ்’ இயக்குநர் கார்த்தி ராஜு இயக்கத்தில், பி.கே.பிலிம்ஸ் சார்பில் ஜி.விட்டல் குமார், ஜி.சுபாஷினி தேவி ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் நேற்று பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டதோடு, நேற்று மாலை பிரபலங்களுக்கும் திரையிடப்பட்டது.
படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் பாராட்டு தெரிவித்ததோடு, படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்கள். அதேபோல் படம் பார்த்த பிரபலங்களும் படம் நன்றாக இருப்பதாக கூறியதோடு, இந்த படத்தின் வெற்றியால் தினேஷும் அடுத்த அடுத்த படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று கூறியுள்ளார்கள்.
பத்திரிகையாளர்களும், பிரபலங்களும் பாராட்டு தெரிவித்துள்ளதால் ‘உள்குத்து’ குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...