வெற்றி மாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’, கவுதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்களில் நடித்து வரும் தனுஷ், அப்படங்களின் படப்பிடிப்புக்கு அவ்வபோது பிரேக் கிடைப்பதால் இடையில் வேறு சில படங்களிலும் நடிக்க முடிவு செய்துள்ளார்.
அதன்படி, பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி 2’ படத்தில் நடிக்க உள்ள தனுஷ், இப்படத்திற்கு பிறகு ஒரு படத்தை தானே இயக்கி நடிக்க உள்ளார். இப்படத்தை ‘மெர்சல்’ படத்தை தயாரித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ராஜ்கிரனை வைத்து தனுஷ் இயக்கிய ‘பா.பாண்டி’ மிகப்பெரிய வரவேற்பு பெற்றதை தொடர்ந்து மீண்டும் படம் இயக்கும் முடிவு உள்ள தனுஷ், இந்த படத்தை ஆக்ஷன் படமாக இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தனுஷின் 37-வது படமாக உருவாகும் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் 2018-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...