AAA படத்திற்கு பிறகு சிம்புவை வைத்து படம் இயக்க இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் பயந்து வரும் நிலையில், மணிரத்னம் அவரை தனது படத்தில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளார். மணிரத்னம் படத்தில் பல ஹீரோக்கள் நடிக்க, அதில் ஒருவர் தான் சிம்பு என்பதால், மணிக்கு பெரிய அளவில் பாரமாக சிம்பு இருக்க மாட்டார்.
ஆனால், மணிரத்னம் படத்திற்குப் பிறகு சிம்புவை வைத்து தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வரும் இயக்குநர் ஒருவர் படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் தான் மோகன் ராஜா. ‘தனி ஒருவன்’, ‘வேலைக்காரன்’ என்று அடுத்தடுத்த மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கும் மோகன் ராஜா, அடுத்ததாக சிம்புவை வைத்து படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் இசை சம்மந்தமான கதை களத்தை கொண்ட படமாம்.
இது குறித்து சிம்புவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வரும் மோகன் ராஜா, விரைவில் அதிகாரப்பூர்வமாக இப்படம் குறித்த தகவலை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...