தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ள திரிஷா, பொது மக்களுக்கான கழிப்பறை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
தொழில்நுட்பமும், நாகரீகமும் வளர்ச்சியடைந்துள்ள தற்போதைய காலக்கட்டத்திலும் கிராமப்புறங்களில் பெரும்பாலான மக்கள் திறந்தவெளி கழிவறைகளையே பயன்படுத்தி வருகின்றனர். இதனை முற்றிலுமாக குறைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
இதற்காக, மக்களிடம் பிரபலமாக உள்ளவர்களை கோண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு, கழிப்பறை கட்டுவதற்காக அரசு செய்து கொடுக்கும் உதவிகள் குறித்தும் எடுத்துறைத்து வருகின்றன.
அந்தவகையில் குறைந்த செலவில் கழிவறை கட்டுவதற்கான முயற்சிகளை யுனிசெப் அமைப்பு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக யுனிசெப் அமைப்பு, சென்னையை அடுத்துள்ள திருப்போரூரில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கழிவறை கட்டும் பணியை தொடங்கியுள்ளது.
யுனிசெப் நிறுவனத்தின் நல்லெண்ண தூதரான நடிகை திரிஷா, இதில் பங்கேற்று செங்கற்களை அடுக்கி கழிவறை கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...