கர்நாடகாவைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ், தமிழ் சினிமாவில் நடிகராக பிரபலமான பிறகு தெலுங்கு, இந்தி சினிமாவிலும் முன்னணி நடிகராக உருவெடுத்தார்.
இதற்கிடையே, பா.ஜ.க-வுக்கு எதிரான கருத்துக்களை கூறி வந்த பிரகாஷ்ராஜ், விஷால் அரசியலுக்கு வருவது குறித்து கருத்து தெரிவிக்கையில், நடிகர்கள் அரசியலுக்கு வர கூடாது, என்று கூறியிருந்தார். இத்தனைக்கும் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாக குழுவில் பிரகாஷ்ராஜ் பங்கேற்று இருக்கிறர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், விஷால் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரகாஷ்ராஜ், ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்ததை ஆதரித்து கருத்து தெரிவித்திருக்கிறார். மேலும், இதற்குமுன் கர்நாடகாவில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது 'கர்நாடகாவை கன்னடன் தான் ஆளவேண்டும்' என ஆக்ரோஷமாக பேசினார்.
ஆனால் தற்போது கன்னடரான ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பேன் என கூறுவதை பிரகாஷ் ராஜ் வரவேற்கிறார். தமிழ்நாட்டை தமிழர் தான் ஆளவேண்டும் என்ற் கருத்தை எதிர்கிறார்.
இப்படி இரட்டை நிலைபாடு ஏன் என பிரகாஷ்ராஜுக்கு எதிராக தமிழர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...