புதிய அரசியல் கட்சி தொடங்கி அதன் மூலம் வர இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ள நிலையில், தனது கட்சியில் தொண்டர்களை சேர்க்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், இதுவரை தான் தவறாக நடந்துக் கொண்டிருந்தால், என்னை மன்னித்துவிடுங்கள், என்று கூறினார்.
மேலும், ஆன்மீக அரசியலுக்கான விளக்கம் அளித்தவர், “ஆன்மிக அரசியல் என்பது, உண்மையான, நேர்மையான, சாதி மதச்சார்பற்ற, நாணயமான, அறவழியில் அரசியல் செய்வது என்று கூறியிருக்கிறார். மேலும் கட்சியின் பெயர், சின்னம் விரைவில் அறிவிக்கப்படும்.” என்றார்.
ரஜினியின் பாபா சின்னத்தில் தாமாரை இருப்பதால், அவர் பா.ஜ.க-வின் கை பாவை என்று பலர் விமர்சித்து வருன் நிலையில், பாபா சின்னத்தில் இருந்த தாமரையை ரஜினிகாந்த் நீக்கியுள்ளார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...