பெண் ஆர்.ஜே ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஐதாராபாத்தை சேர்ந்த பிரபல பாடகர் கஷல் ஸ்ரீனிவாஸ் என்பவரை நேற்று முன் தினம் போலீசார் கைது செய்தனர்.
இந்த செய்தி ஆந்திர ஊடகங்கள் மட்டும் இன்றி தமிழக ஊடகத்திலும் பரவலாக செய்திகள் வெளியாயின. இந்த நிலையில், இந்த செய்தியை வெளியிட்ட முன்னணி செய்தி இணையதளம் ஒன்று, கஷல் ஸ்ரீநிவாஸ் புகைப்படத்திற்கு பதிலாக தமிழ் சினிமாவில் முன்னணி பாடகராக உள்ள ஸ்ரீநிவாஸின் புகைப்படத்தை வெளியிட்டுவிட்டது.
இதனால், ஸ்ரீநிவாஸ் தான் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பலர் தவறாக நினைத்துக் கொண்டதோடு, அவருக்கு போன் போட்டு விசாரிக்கவும் தொடங்கிவிட்டார்கள். இதனால் கோபம் கொண்ட ஸ்ரீநிவாஸ், அந்த இணையதள பத்திரிகை மீது வழக்கு தொடர்வேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது, ஸ்ரீநிவாஸ் புகைப்படத்தையும் அந்த செய்தியையும் அந்த இணையதளம் நீக்கியிருப்பதோடு, அவரிடம் மன்னிப்பும் கேட்டுள்ளது.
அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...
எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...
விஜய் மில்டன் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கிறார்...