தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் செயலாளர் என சினிமாத் துறையில் இரண்டு பொருப்புகளை வகிக்கும் விஷால், விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று ஏற்கனவே அறிவித்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலிலும் போட்டியிட முயன்றார்.
ஆனால், அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால், அவரால் போட்டியிட முடியவில்லை. இருந்தாலும் ஆர்.கே.நகர் மக்களுக்காக நான் பணிபுரிவேன் என்று அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள விஷால், அவருக்காக தெரு தெருவாக பிரச்சாரம் செய்ய நான் தயாராக இருக்கிறேன், என்று கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “கட்சி தொடங்கி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக ரஜினி அறிவித்துள்ளார். தலைவன் அரசியலில் இறங்கிவிட்டார். அரசியல் என்பதும் ஒரு சமூக சேவை தான். நான் அவருக்கு ஒரு நல்ல தொண்டனாக ரோட்ல இறங்கி அவர் போட்டியிடும் அத்தனை தொகுதியிலும் பிரச்சாரம் செய்வேன். எப்போதும், அவருக்கு உதவியாக இருப்பேன்.” என்று தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ரஜினி மற்றும் கமல் என இருவரும் அரசியலுக்கு வந்தால் ஆதரவு யாருக்கு? என்ற பத்திரிகையாளர்கள் கேள்விக்கு ”அரசியல் என்று வந்தால் கமல்ஹாசனுக்கு தான் என் ஆதரவு” என்று விஷால் பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...