Latest News :

நடிகர் கொடுத்த டார்ச்சர் - தற்கொலைக்கு முயன்ற இயக்குநர்!
Thursday January-04 2018

ஜெய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பலூன்’. இதில் ஹீரோயின்களாக அஞ்சலி, ஜனனி ஐயர் ஆகியோர் நடித்திருக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் சினிஷ் இயக்கியுள்ளார்.

 

ரசிகர்களிடம் இப்படம் வரவேற்பு பெற்றாலும், காலதாமதமாக ரிலீஸ் ஆனதால் தயாரிப்பாளருக்கு நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நஷ்ட்டத்திற்கும், படம் காலதாமதம் ஆனதற்கும் காரணம் நடிகர் ஜெய் தான் என்றும், அதற்காக அவர் தயாரிப்பாளருக்கு இழப்பீடு தர வேண்டும் என்றும் இயக்குநர் சினிஷ் மறைமுகமாக கூறியிருந்தார்.

 

இந்த நிலையில், பலூன் படப்பிடிப்பின் போது, சரியாக படப்பிடிப்புக்கு வராமலும், அப்படி வந்தாலும் மது போதையில் வந்து படப்பிடிப்பு நடைபெறாத வகையிலும் ஜெய் நடந்துக்கொண்டதாக தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

ஜெய், இப்படி தொடர்ந்து கொடுத்த டார்ச்சர் காரணமாக இயக்குநர் சினிஷ் தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரை காப்பாற்றி சமாதானப்படுத்திய தயாரிப்பாளர்கள் அவரது எதிர்காலத்திற்குகாக இந்த படத்தை முடித்ததாகவும் தெரிவித்துள்ளார்கள்.

 

இப்படி ஜெய் கொடுத்த டார்ச்சாராலும், இடையூறாலும் தான் படத்திறிகு நஷ்ட்டம் ஏற்பட்டுவிட்டது என்று கூறிய தயாரிப்பாளர்கள், இது தொடர்பாக ஜெய் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர்.

Related News

1717

”’இந்தியன் 2’ படம் 5 வருடம் ஆகக் காரணம் நாங்கள் அல்ல” - கமல்ஹாசன் விளக்கம்
Wednesday June-26 2024

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...