’ஸ்கெட்ச்’, ‘துருவ நட்சத்திரம்’, ‘சாமி ஸ்கொயர்’ என்று மூன்று படங்களில் விக்ரம் நடித்து வருகிறார். இதில் ‘ஸ்கெட்ச்’ வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. மற்ற இரண்டு படங்களும் முடியும் தருவாயில் உள்ளது.
அடுத்ததாக ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கும் விக்ரம், அடுத்ததாக கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். ஆர்.எஸ்.விமல் இயக்கும் இப்படத்திற்கு ‘மஹாவீர் கர்ணா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளிலு உருவாகும் இப்படத்தை ரூ.300 கோடி பட்ஜெட்டில், நியூயார்க்கை சேர்ந்த யுனைடெட் கிங்டம் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
உலக அளவில் பிரபலமான தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்ற உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. படத்தை 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். தற்போது இந்தி பதிப்பிற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது.
கெளபாய்ஸ், நாடோடி வீரர்கள், கோஸ்ட்பஸ்டர்ஸ் அல்லது புதையல் வேட்டையாடுபவர்கள் பற்றிய படங்களே பொதுவாக சாகச படங்களாகக் கருதப்படுகின்றன...
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வா முரளியின் சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘நேசிப்பாயா’...
‘டிஎன்ஏ' படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததில் இருந்தே அதன் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர்...