தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த குஷ்பு, தற்போது அரசியல் திரைப்பட தயாரிப்பு என்று பிஸியாக இருக்கிறார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு, அவ்வபோது பல சர்ச்சைக்குள் சிக்குவதும், சர்ச்சையான விவாதங்களில் பங்கேற்பதும் என்று எப்போதும் பரபரப்போடு தான் இருப்பார்.
இதற்கிடையே, தொடர் பிரச்சினைகள் காரணமாக ட்விட்டரில் இருந்து திடீரென்று வெளியேறிய குஷ்பு, தற்போது மீண்டும் ட்விட்டரில் ஆக்டிவாக பதிவிட்டு வரும் நிலையில், சமீபத்தில் ஒருவரை பற்றி மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
”ஒருத்தன் ரொம்ப படுத்துரான்....டேய், நீ தலைகீழே நின்னாலும் நீ ஒரு லூசுதான். வாழ்க்கையில ஜெயிக்கிறதுக்கு தீயா வேலை செய்யனும் குமாரு..வெரும் ஜால்ட்ரா அடிச்சி கூஜா தூக்குன நீ வெலங்கன மாதிரிதான்...போடா...எதாவது வேலை பாரு..” என்று குஷ்பு ஒருவரை திட்டியிருக்கிறார். ஆனால், அவர் யாரை திட்டுகிறார் என்று குறிப்பிடவில்லை.
குஷ்பு திட்டியிருக்கும் அந்த நபர் யாராக இருக்கும், என்ற ஆராய்ச்சியில் பலர் ஈடுபட்டுள்ளதால், தற்போது ட்விட்டர் பக்கமே படு சூடாகியிருக்கிறது.
oruthan romba paduthuraan..dai; nee thalai keezhe ninnaalum nee oru loosudhaan..vaazhkaile jaikrudhukku 'theeya velai seiyyanum 'kumaru'..verum jalra adichu kuja thookna nee velangna maadhiridhaan..poda..yedhavadhu velai paaru..ideal mind is a devil's workshop..😊😊😊😉😉
— khushbusundar (@khushsundar) January 7, 2018
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...