’சிலந்தி’, ’ரணதந்த்ரா’ படங்களைத் தொடர்ந்து ஆதிராஜன் எழுதி இயக்கும் படம் ‘அருவா சண்ட’. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. புதுமுகம் ராஜா நாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் மாளவிகா மேனன், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், கஞ்சா கருப்பு, சௌந்தர்ராஜா, மதுரை சுஜாதா, காதல் சுகுமார், விஜய் டிவி சரத் உட்பட பலர் நடித்திருக்கின்றனர்.
காதல் சண்டையையும், கபடிச் சண்டையையும் கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்கு தரண் இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதியிருக்கிறார். சந்தோஷ் பாண்டி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் சுரேஷ் கல்லேரி கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
கெளரவக் கொலைகளின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசரை இயக்குநர் அமீர் இன்று வெளியிட்டுள்ளார். மேலும், டீசரை பார்த்த அமீர், ”டீஸர் நன்றாக இருக்கிறது, படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்” என்று பாராட்டினார்.
ஒயிட் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் வி.ராஜா தயாரித்துள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
கெளபாய்ஸ், நாடோடி வீரர்கள், கோஸ்ட்பஸ்டர்ஸ் அல்லது புதையல் வேட்டையாடுபவர்கள் பற்றிய படங்களே பொதுவாக சாகச படங்களாகக் கருதப்படுகின்றன...
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வா முரளியின் சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘நேசிப்பாயா’...
‘டிஎன்ஏ' படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததில் இருந்தே அதன் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர்...