சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்கள். இவர்களது சமூக வலைதளம் உள்ளிட்ட அனைத்திலும் ரசிகர்களின் எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டுகிறது.
அப்படிப்பட்ட பிரபல சீரியல் நடிகைகளில் ஒருவர் தான் ஆல்யா. பிரபல சேனலில் ஒளிபரப்பாகும் ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபலமான இவர், நடிப்பு மட்டும் இன்றி நடனம், டப்ஸ்மேஷ் போன்ற பல வகைகளில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் தனது சினிமா பயணம் குறித்து பேட்டியளித்த ஆல்யா, தன்னை போலீஸ் கைது செய்த கதையை சொல்லி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். அதுவும் ஜப்பான் போலீசாரால் கைது செய்யப்பட்டாராம்.
ஆல்யாவும், அவரது சீன தோழியும் ஒரே மிதிவண்டியில் ஜப்பானில் பயணம் செய்திருக்கின்றனர். அங்கு மிதிவண்டியில் இருவர் பயணம் செய்வது தவறான விஷயமாம். இதை தெரியாமல் அவர் பயணம் செய்ய போலீசார் அவர்களை மிரட்டியுள்ளனர். பின் தெரியாமல் செய்துவிட்டோம் என்று கூறியதால், அவர்களை போலீஸ் மன்னித்துவிட்டதாம்.
கெளபாய்ஸ், நாடோடி வீரர்கள், கோஸ்ட்பஸ்டர்ஸ் அல்லது புதையல் வேட்டையாடுபவர்கள் பற்றிய படங்களே பொதுவாக சாகச படங்களாகக் கருதப்படுகின்றன...
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வா முரளியின் சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘நேசிப்பாயா’...
‘டிஎன்ஏ' படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததில் இருந்தே அதன் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர்...