ஜெயலலிதா மறைவு, கருணாநிதி உடல்நிலை பாதிப்பு ஆகியவற்றால் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதோடு, பலருக்கு முதல்வர் ஆகும் ஆசையும் வந்திருக்கிறது. இதையடுத்து கமல், ரஜினி, விஷால் ஆகியோர் நேரடி அரசியலில் இறங்கியுள்ள நிலையில், தற்போது இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜும் அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
ஆரம்பத்தில், அதிமுக-வின் ஆதரவாளாரான கே.பாக்யராஜ் திடீரென்று திமுக-வுக்கு தனது ஆதரவை தெரிவித்தவர். சில ஆண்டுகளுக்கு பிறகு எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று அறிவித்ததோடு, அரசியல் விவகாரங்களில் தலையிடாமல் இருந்தார்.
இந்த நிலையில், நேரடி அரசியலில் தான் ஈடுபடப் போவதாக சமீபத்தில் அறிவித்த கே.பாக்யாஜ், அரசியலில் இறங்கினால் அதிமுக-வில் இணைவேன், என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி, இன்று சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது என்றும் அவரின் பக்தனாக, கட்சியை வீழ்ச்சியடைய விடாமல் இருக்க தன்னால் முடிந்த அளவுக்குப் பாடுபடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
கெளபாய்ஸ், நாடோடி வீரர்கள், கோஸ்ட்பஸ்டர்ஸ் அல்லது புதையல் வேட்டையாடுபவர்கள் பற்றிய படங்களே பொதுவாக சாகச படங்களாகக் கருதப்படுகின்றன...
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வா முரளியின் சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘நேசிப்பாயா’...
‘டிஎன்ஏ' படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததில் இருந்தே அதன் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர்...