தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த கலை நிகழ்ச்சி குறித்து பல்வேறு விமசனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. இதேபோல், விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்த போதும், இப்படி ஒரு கலை நிகழ்ச்சியை நடத்தி சங்கத்தின் கடனை அடைத்தார்.
விஜயகாந்த் கலை நிகழ்ச்சி நடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்ட போது, அவரை பார்த்து ரஜினிகாந்த் பயந்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
கலை நிகழ்ச்சிக்காக முன்னணி நடிகர் நடிகைகளை நேரில் சந்தித்து அழைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விஜயகாந்த், ரஜினியையும் சந்திக்க சென்றாராம். அப்போது, ரஜினிகாந்த் பாபா படப்பிடிப்பில் இருந்த போது, அங்கே சென்ற விஜயகாந்த், காரில் இருந்து இறங்கியதும் ரஜினியை நோக்கி வேகமாக நடந்தாராம். இவரை தூரத்திலிருந்து பார்த்த ரஜினிகாந்த் பயந்தே விட்டாராம். பிறகு தான் விஜயகாந்த் என்று தெரிந்ததாம்.
விஜயகாந்த், ரஜினியிடம் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வேண்டும், என்று சொன்னதும் உடனே சரி என்று சொன்னவர், கண்டிப்பாக வருகிறேன், என்பதையே பல முறை சொன்னாராம்.
இந்த தகவலை நடிகர் டெல்லி கணேஷ், சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...