திரைப்பட இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் அவர்களின் இல்ல விழாவில், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டார்கள்.
‘காமராசு’, ‘அய்யா வழி’, ‘நதிகள் நனைவதில்லை’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய நாஞ்சில் பி.சி.அன்பழகனின் மகள்கள் சுவேதா, சுருதி ஆகியோரின் ருதுமங்கள விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் தமிழக அமைச்சர்கள் திரு.ஜெயக்குமார், திரு.தங்கமணி, முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி, முன்னாள் அமைச்சர்கள் திருமதி.வளர்மதி, திரு.தளவாய் சுந்தரம், நடிகர்கள் ராமராஜன், சிங்கமுத்து, அனுமோகன், தியாகு, நடிகை ரிசா, இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், சக்தி சிதம்பரம், இசையமைப்பாளர் செளவுந்தர்யன், கவிஞர்கள் முத்துலிங்கம், பிறை சூடன், தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம், சினிமா மக்கள் தொடர்பாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட ஏராளமான அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசிய இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், தனது அடுத்தப் படத்தின் அறிவிப்பை விரைவில் வெளியிட இருப்பதாக தெரிவித்தார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...