‘மெர்சல்’ வெற்றியை தொடர்ந்து விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம் விஜயின் 62 வது படமாகும். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இதற்கிடையே, விஜயின் 63 வது படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார்? என்பதில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஆரம்பத்தில் அட்லி பெயர் அடிபட்டாலும், தற்போது அட்லியை விஜய் கழட்டிவிட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அட்லி நிச்சயம் விஜய் படத்தை இயக்கப் போவதில்லை என்று கூறப்பட்டுள்ள நிலையில், மோகன் ராஜா விஜயை சந்தித்து ஒரு கதை சொல்லியிருப்பதாகவும், அந்த கதை விஜய்க்கு பிடித்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.
இதனால், மோகன் ராஜா தான் விஜயின் 63 வது படத்தை இயக்குவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வேறு ஒரு இயக்குநரும் விஜய்க்கு கதை சொல்லி ஓகே வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
ஆம், விஜயை வைத்து ‘ஜில்லா’ என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த நெல்சன் தான் விஜயின் 63 வது படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...