கடந்த ஆண்டு தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்த ரஜினிகாந்த், அரசியலில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக மாவட்டம் வாரியாக தனது மன்றத்திற்கு நிர்வாகிகளை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இருந்தாலும், அவரது கட்சி மற்றும் சின்னம் போன்ற விபரங்கள் எப்போது அறிவிக்கப்படும் என்று அவரது ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, நடிகர் கமல் தனது கட்சி பெயர் மற்றும் சின்னத்தை வெளியிட்டு, தனது கட்சியின் பொதுக்கூட்டத்தையும் மதுரையில் நடத்தி முடித்துவிட்டார். அடுத்த பொதுக்கூட்டம் திருச்சியில் நடத்த இருப்பதாகவும் கூறியுள்ளார்.
கமல் கட்சியின் பெயரை அறிவித்தது போல, ரஜினிகாந்தும் தனது அரசியல் கட்சி பெயரை விரைவில் அறிவிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வரும் நிலையில், ரஜினிகாந்த் தனது புதிய படத்தின் அறிவிப்பை நேற்று வெளியிட்டது அவரது ரசிகர்களிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘காலா’, ‘2.0’ ஆகியப் படங்கள் வெளியாக உள்ள நிலையில், அரசியலில் ஈடுபட்டிருக்கும் ரஜினிகாந்த், கட்சி மற்றும் சின்னம் அறிவிப்பு குறித்து எந்த விபரமும் சொல்லாமல், புதிய படம் நடிப்பதில் கவனம் செலுத்தியிருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
முன்பெல்லாம் ரஜினி புதிய படம் அறிவித்தால் சந்தோஷப்படும் அவரது ரசிகர்கள், இந்த முறை வருத்தப்படுவதோடு, “அவரை நம்பி நாம் வந்தால், அவர் புது புது முடிவை எடுக்கிறாரே, என்னத்த செய்யப் போகிறாரோ” என்றும் புலம்புகிறார்களாம்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...