Latest News :

ஸ்ரீதேவி மரணத்தில் தொடரும் மர்மம் - கணவரிடம் துபாய் போலீஸ் விசாரணை!
Tuesday February-27 2018

துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளதால் பாலிவுட் திரையுலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

கடந்த வாரம் தனது உறவினர் திருமணத்திற்கு குடும்பத்துடன் துபாய் சென்று இருந்த ஸ்ரீதேவி, திருமணம் முடிந்து கணவர் மற்றும் அவரது குழந்தைகள் மும்பை திரும்பிவிட, ஸ்ரீதேவி மட்டும் ஷாப்பிங் செல்வதற்காக துபாயில் தங்கி விட்டார். முன்பு இருந்த ஹோட்டலை காலி செய்துவிட்டு, ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸில், அறை எண் 2201ல் தங்கியுள்ளார்.

 

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு தனது மனைவிக்கு ஆச்சரிய விருந்து கொடுக்க மும்பையில் இருந்து போனி கபூர் துபாய் சென்றதாகவும், சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்த இவர்கள் ஹோட்டல் செல்ல தயாராகி உள்ளனர். அப்போது குளியறைக்கு சென்று இருந்த ஸ்ரீதேவி மாரடைப்பு ஏற்பட்டு, அங்குள்ள பாத் டப்பில் தவறி விழுந்து இறந்துவிட்டதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

 

ஆனால், தடவியல் நிபுணர்கள் நடத்திய சோதனையில், அவரது ரத்தத்தில் ஆல்கஹால் இருந்ததும், எதிர்பாராமல் பாத் டப்பில் தவறி விழுந்து இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நேற்று கலீத் டைம்ஸ் வெளியிட்டு இருந்தது. ஆனால், இந்த சோதனை அறிக்கையில் தனக்கு திருப்தியில்லை என்று தடவியல் இயக்குநர் கையெழுத்திட மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

மேலும், ஒன்றரை அடி உள்ள பாத் டப்பில் எப்படி ஸ்ரீதேவி தவறி விழக்கூடும் என்று துபாய் அரசு வழக்கறிஞர் கேள்வி எழுப்பியதாகவும், ஸ்ரீதேவி மூச்சு முட்டியே உயிரிழந்திருக்க கூடும், என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து, ஸ்ரீதேவின் கணவர் போனி கபூரிடம் துபாய் போலீசார் விசாரணை நடத்தியுள்ளார்கள்.

 

திருமணம் முடிந்ததும் துபாயில் இருந்து சென்ற போனி கபூர் திரும்ப துபாய் வந்தது ஏன்? துபாய் வந்தவர் ஸ்ரீதேவியை சந்தித்து பேசிய சில நிமிடங்களில் அவர் பாத்ரூமில் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். ஆனால், இரவு 10.30 மணிக்கு தான் ஸ்ரீதேவி இறந்துவிட்ட செய்தி வெளியாகியிருக்கிறது. அதுவரை அவர் பாத்ரூமில் தான் இருந்திருக்கிறார், ஆனால் போனி கபூர், ஸ்ரீதேவி பாத்ரூம் சென்ற 15 நிமிடத்தில் கதவை தட்டியதாகவும், அவரிடம் பதில் வராததால் உறவினர் ஒருவரை அழைத்து கதவை உடைத்துப் பார்த்ததாகவும் கூறியுள்ளார். இதனால், துபாய் போலிஸுக்கு ஸ்ரீதேவி மரணத்தின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. 

Related News

2075

”’இந்தியன் 2’ படம் 5 வருடம் ஆகக் காரணம் நாங்கள் அல்ல” - கமல்ஹாசன் விளக்கம்
Wednesday June-26 2024

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...