சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியான ‘சக்க போடு போடு ராஜா’ மிகப்பெரிய தோல்வியை தழுவிய நிலையில், அவர் ஹீரோவாக நடித்து ரிலீஸுக்கு தயாராக உள்ள மூன்று படங்கள் வெளியாக முடியாமல் தவித்து வருகிறது. இதனால் சந்தானம் என்ற ஒரு நடிகரையே ரசிகர்கள் மறந்துபோகும் நிலை உருவாகியுள்ளது.
இதை இப்படியே விட்டுவிட்டால், ரோட்டில் நடந்து சென்றால் கூட தன்னை யாரும் கண்டுக்கொள்ள மாட்டார்கள், என்று நினைத்த சந்தானம், எப்படியாவது தனது படத்தை ரிலீஸ் செய்திட வேண்டும், என்று அவர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததால், தனது நடிப்பில் வெற்றி பெற்ற ‘தில்லுக்கு துட்டு’ என்ற படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தொடங்கிவிட்டார்.
சந்தானத்தின் சொந்த நிறுவனமான ஹண்ட் மேட் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘தில்லுக்கு துட்டு 2’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் சந்தானத்திற்கு ஜோடியாக தீப்தி ஷெட்டி நடிக்கிறார். ராம்பாலா இயக்க, தீபக் குமார்பதி ஒளிப்பதிவு செய்கிறார். ஷபிர் இசையமைக்கிறார்.
வரும் 15 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்தின் தொடக்க விழா இன்று ஐதராபாத்தில் பூஜையுடன் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.
அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...
எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...
விஜய் மில்டன் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கிறார்...