Latest News :

25 வயது வாலிபரை திருமணம் செய்யும் 35 வயது தமிழ் நடிகை!
Friday March-02 2018

திருமண வயது வந்துவிட்டால் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும், என்ற விதிமுறையெல்லாம் நடிகர் நடிகைகளுக்கு கிடையாது. 40 வயதை கடந்தும் பல நடிகர்கள் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருப்பது போல 35 வயதை கடந்தும் நடிகைகள் பலர் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.

 

அதேபோன்ற, நடிகர் நடிகைகள் திருமணம் செய்யும் போது வயது வித்தியாசத்தையெல்லாம் பார்ப்பதில்லை. ஒரு சமயத்தில் மணப்பெண் அதிக அயதுடையவராக இருக்கலாம், அல்லது மணமகன் அதிக வயதுடையவர்களாக இருக்கலாம், இதெல்லாம் அவர்களுக்கு சாதாரணம் காதல் மட்டுமே முக்கியம் என்ற நிலை தான் இருக்கிறது.

 

அந்த வரிசையில், 25 வயதுடைய இளைஞரை 35 வயதுடைய தமிழ் நடிகை ஒருவர் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார். அவர் தான் நம்ம ஸ்ரேயா. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா, ஒரு சில இந்திப் படங்களிலும், ஆங்கிலப் படங்கலிலும் நடித்திருக்கும் இவருக்கு தற்போது தமிழில் சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லை. தெலுங்கில் மட்டும் ஒரு படம் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.

 

இந்த நிலையில், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரரும் தொழிலதிபருமான ஆண்ட்ரோ கோஷ்சீவை ஸ்ரேயா திருமணம் செய்துக் கொள்ளப்போகிறார். 35 வயதான ஸ்ரேயா 25 வயதான ஆண்ட்ரோவை திருமணம் செய்துக் கொள்ளப்போவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பாக பாலிவுட்டில் இதுபோன்ற பெரும் வயது வித்தியாசம் உள்ள திருமணம் ஒன்று நடந்திருந்தாலும், அந்த தம்பதிகள் சில ஆண்டுகளிலேயே பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஸ்ரேயா - ஆண்ட்ரோ திருமணம் வரும் மார்ச் 17, 18, 19 ஆகிய தேதிகளில் உதய்பூரில் நடைபெற உள்ளது.

Related News

2094

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery