‘துப்பறிவாளன்’ படத்திற்கு பிறகு விஷால் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘இரும்புத்திரை’. பி.எஸ்.மித்ரன் என்ற அறிமுக இயக்குநர் இயக்கியுள்ள இப்படத்தில் வில்லனாக அர்ஜுன் நடித்திருக்கிறார். ஹீரோயினாக சமந்தா நடித்திருக்கிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு சில காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தவுடன் ‘இரும்புத்திரை’ படத்தை வெளியிட விஷால் முடிவு செய்துள்ளார்.
விஷாலின் சொந்த நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை ‘புலி’ படத்தை தயாரித்த தமீன்ஸ் பிலிம்ஸ் சிபு தமீன்ஸ் கைப்பற்றியுள்ளார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...
எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...