தற்போது தமிழ் சினிமாவில் நடைபெற்று வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தால் 40 புதுப்படங்கள் வெளியாகமல் முடங்கி போயுள்ளது. இதனால், சுமார் 40 கோடி ரூபாய் நஷ்ட்டம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம், சென்னையில் உள்ள திரையரங்கங்கள் வழக்கம் போல செயல்பட்டு வருவதோடு, பழைய படங்களை ரிலீஸ் செய்து நல்ல முறையில் கல்லா கட்டியும் வருகிறார்களாம்.
அந்த வரிசையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான ‘6 அத்தியாயம்’ என்ற படமும் தற்போது நல்ல முறையில் ஓடிக்கொண்டிருக்கிறதாம். ஆறு குறும்படங்களை ஒன்றாக தொகுத்து, ஒரு திரைப்படமாக உருவாக்கிய இப்படத்தின் முயற்சியை பலர் பாராட்டுவதோடு, இந்த ஆறு படங்களை இயக்கிய ஆறு இயக்குநர்களுக்கும் முழுநீளத்திரைப்படம் இயக்கும் வாய்ப்புகளும் கிடைத்து வருகிறதாம்.
இந்த நிலையில், இந்த ஆறு படங்களில் ஒரு படத்தை இயக்கிய கேபிள் சங்கர், விக்ரமை வைத்து படம் இயக்கப் போகிறாராம். சமீபத்தில் இவர் விக்ரமிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறார். அந்த கதையை விக்ரமும் ஓகே சொல்லிவிட்டதோடு, தயாரிப்பாளரும் ரெடியாகிவிட்டாராம்.
விக்ரம் தேதி கொடுத்தால் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட கேபிள் சங்கர் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...