சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் வையாபுரி, போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் கஷ்ட்டப்பட்டுக் கொண்டிருந்த போது பிக் பாஸ் என்ற டிவி நிகழ்ச்சி அவருக்கு கைகொடுத்தது. அந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற பிறகு ஒரு சில பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்துள்ளது.
இருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஜூலி, ஓவியா, ரைசா, ஆரவ் போன்றவர்கள் பிரபலமடைந்தது போல வையாபுரி பிரபலமாகவில்லை, அதேபோல் அவர்களுக்கு கிடைப்பது போன்ற பட வாய்ப்புகளும், பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளும் அவருக்கு கிடைக்கவில்லையாம்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த சமயத்தில் அதில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களும் வையாபுரியுடன் தொடர்பில் இருந்தார்களாம். தற்போது ஆரவ், காயத்ரி ரகுராம், சினேகன் மற்றும் ஆர்த்தி ஆகிய நான்கு பேர் மட்டுமே வையாபுரியுடன் தொடர்பில் இருக்கிறார்களாம், மற்றவர்கள் அவர் போன் செய்தால் கூட போனை எடுப்பதில்லையாம். இதனால் வருத்தமடைந்துள்ள வையாபுரி, இந்த விஷயத்தை தனது குடும்பத்தாரிடம் சொல்ல அவர்களும் தற்போது சோகத்தில் ஆழ்ந்துள்ளார்களாம்.
ஸ்ரீ சித்தி விநாயகா மூவி மேக்கர் சார்பில் டி...
'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும் பேசும்' என்பார்கள்...
இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...