பிரபல நடிகர் நடிகைகள் பெயரில் போலியான சமூக வலைதள பக்கங்களை உருவாக்கி அதன் மூலம் தவறான கருத்துக்களை சிலர் பரப்பு வருகிறார்கள். இதனால் பல நடிகர், நடிகைகள் பாதிக்கப்பட்டதுண்டு. இத்துடன் ஹக்கர்கள் என்று சொல்லப்படுபவர்கள் தங்களை கைவரிசை மூலம் பிரபலங்களின் சமூக இணைய பக்கங்களை முடக்கவும் செய்கிறார்கள்.
கடந்த ஆண்டு பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தை இப்படி தான் யாரோ ஹக் செய்து பல ஆபாச புகைப்படங்களை வெளியிட்டு கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்படுத்தினார்கள்.
இந்த நிலையில், நடிகை ராதிகாவிடமுக் ஹக்கர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர். இதனால் மிகவும் பாதிப்புக்குள்ளான ராதிகாவுக்கு ரசிகர் ஒருவர் உதவி செய்திட தற்போது அவர் தனது ட்விட்டர் கணக்கை திரும்ப பெற்றுள்ளார்.
82 களில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த ராதிகா, தற்போதும் டிவி சீரியல் திரைப்படங்கள் என்று பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதோடு, தயாரித்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ சித்தி விநாயகா மூவி மேக்கர் சார்பில் டி...
'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும் பேசும்' என்பார்கள்...
இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...