இந்திய சினிமா மட்டும் இன்றி ஹாலிவுட் சினிமாவிலும் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் புகார்கள் வந்துக்கொண்டு இருக்க, தற்போது தென் கொரிய சினிமாவிலும் இதுபோன்ற பிரச்சினைகள் எழ தொடங்கியுள்ளது.
தென் கொரிய நடிககை ஒருவர் பிரபல இயக்குநரும், நடிகரும் தன்னை கற்பழித்து விட்டதாக புகார் தெரிவித்துள்ளனர்.
கிம் என்ற அந்த பிரபல இயக்குநர் மீது ஏற்கனவே மூன்று பெண்கள் பாலியல் புகார் தெரிவித்திருந்த நிலையில், அதில் ஒரு நடிகை, பல ஆண்டுகளுக்கு முன்பு கிராமம் ஒன்றில் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்த போது, தினமும் இரவு நேரத்தில் தான் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைக்குள் இயக்குநர் கிம் நுழை முயன்றார். போன் செய்தார். ஆனால், நான் கண்டுக்கொள்ளவில்லை. கதை குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறி, என்னை அவர் தனது அறைக்கு அழைத்தார். நான் அங்கு சென்ற போது அவர் என்னை கற்பழித்து விட்டார். அவருடன் நடிகர் சோ ஜே ஹ்யூனும் என்னை கற்பழித்தார், என்று கூறியுள்ளார்.
மேலும், ஆடிசனின் போது கிம் தனது மார்பங்களை பார்க்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறியதாகவும், ஆடைகளை அவிழ்த்துவிட்டு நிற்குமாறு கூறியதாகவும் மற்றொரு நடிகை தெரிவித்துள்ளார். அதேபோல், ஸ்கிரிப்பிட்டில் இல்லாத செக்ஸ் காட்சிகளை படமாக்கிய கிம், தனது ஆசைக்கு ஒத்துழைக்காத நடிகைகளை காட்சி என்ற பெயரில் அடித்து துன்புறுத்த செய்வார், என்று மற்றொரு நடிகை புகார் தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...