அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருக்கும் போதே பல புதிய முயற்சிகளை மேற்கொண்டது. அப்படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டால் பிலிம்ஸ் நிறுவனம், படத்தின் புரோமோஷன் பணிகளில் பல புதிய யுகதிகளை கையாண்டது பெரும் வரவேற்பை பெற்றது.
டீசர், டிரைலர், பாடல்கள் என்று அனைத்தும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது போல ‘மெர்சல்’ மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததோடு, இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் வகையில் அரசியல் சர்ச்சையிலும் சிக்கியது. இருந்தாலும், படத்தில் விஜய் பேசிய அரசியல் வசனங்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்ததோடு, ரசிகர்களும் வரவேற்பு தெரிவித்தார்கள். இதனால் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் ஓடி ஒளியும் அளவுக்கு ‘மெர்சல்’ படத்தின் வசனங்கள் விஸ்வரூபம் எடுத்ததோடு, படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இதன் மூலம், ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்கள் செய்த வசூல் சாதனையை முறியடித்த விஜய், தென்னிந்திய பாக்ஸ் ஆபிஸின் நம்பர் ஒன் நடிகர் என்ற பெருமையை பெற்றதோடு, தனது மெர்சல் படம் மூலம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தினார்.
இந்த நிலையில், ’மெர்சல்’ படத்திற்கு இங்கிலாந்து நாட்டு கெளரவம் கிடைத்திருப்பது, படக்குழுவினரை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் நான்காவது தேசிய திரைப்படா விழாவுக்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், சிறந்த வெளிநாட்டு படம் பிரிவில், விஜயிடன் ‘மெர்சல்’ சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...