சரத்குமார், மீனா, வடிவேலு ஆகியோரது நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான படம் ‘மாயி’. இதில் வடிவேலு பெண் பார்க்க போகும் காட்சி ஒன்றில் மின்னல் என்ற வேடத்தில் நடித்தவர் தீபா. இந்த காமெடி காட்சி பிரபலமானதால் தீபாவும் சினிமாவில் கொஞ்சம் பிரபலமானார்.
ஆனால், போதிய சினிமா வாய்ப்பு இல்லாததால் ஒதுங்கியிருந்தவர் தற்போது பிரபல டிவி சேனலில் ‘யாரடி நீ மோகினி’ என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தனது சினிமா அனுபவம் குறித்து பேசியுள்ள தீபா, “நான் முதலில் மாயி படத்தில் நடித்தேன். அதன் பிறகு எனக்கு சினிமா ஆர்வம் தொற்றிக் கொண்டது. பேர் புகழ் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அது நிறைவேறாமல் போய்விட்டது. காரணம், சினிமாவில் நடிப்பை விட முக்கியமாகப் பெண்களிடம் அட்ஜஸ்ட்மெண்டை தான் எதிர்ப்பார்க்கிறார்கள். அதனால் தான் எனக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
வலியபோய் வாய்ப்பு கேட்டால் அட்ஜச்ட்மெண்டுக்கு ரெடியா, என்று நேரடியாகவே கேட்கிறார்கள். இதனாலே யாரிடமும் வாய்ப்பு கேட்க போனதில்லை. என்னுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனை நினைத்து பல தடவை நான் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்.” என்றார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...