மலையால சினிமாவின் பிரபல நடிகரான கொல்லம் அஜித், இன்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
1983 ஆம் ஆண்டு வெளியான ‘பரன்னு பரன்னு பரன்னு’ என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகமான அஜித், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
வில்லன் வேடங்களில் அதிகமாக நடித்து வந்த இவர், 1990 களில் மலையால சினிமாவின் பிரபல வில்லன் நடிகராக திகழ்ந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘இவன் அர்த்தநாரி’ தான் அஜித் நடித்த கடைசி படம்.
கடந்த சில மாதங்களாக வயிறு தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். பிறகு சிகிச்சை முடிந்ததும் சினிமாவில் நடிப்பதை தவிர்த்துவிட்டு வீட்டு ஓய்வில் எடுத்து வந்தவரின் உடல் நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவர் சமீபத்தில் கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
ஸ்ரீ சித்தி விநாயகா மூவி மேக்கர் சார்பில் டி...
'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும் பேசும்' என்பார்கள்...
இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...