பிரபல திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, சினிமா தொழிலாளர்களுக்கு நன்கொடையாக ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்.
திரைப்பட தயாரிப்பாளர்களின் நலனுக்காக கடந்த ஒன்றரை மாதமாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. புதிய திரைப்படங்கள் ரிலிஸுக்கு தடை, படப்பிடிப்புகள் ரத்து, சினிமா நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடை பல்வேறு தடைகளோடு நடைபெற்று வரும் இந்த வேலை நிறுத்தத்தால் தமிழ் சினிமாவே ஸ்தம்பித்துள்ளது.
மேலும், ஒன்றரை மாதமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் சினிமா தொழிலாளர்கள் வேலையின்றி சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அவர்களது நலனுக்காக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளருமான எஸ்.ஆர்.பிரபு ரூ.10 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
எஸ்.ஆர்.பிரபுவின் நன்கொடையை தொடர்ந்து மேலும் பல தயாரிப்பாளர்கள் சினிமா தொழிலார்கள் சங்கமான பெப்ஸிக்கு நன்கொடை வழங்க முன்வந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...
எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...