அஜித் ரொம்ப நல்லவர், வல்லவர், நேர்மையானவர், நியாயமானவர் என்று பல சினிமா பிரபலங்கள் சொல்வதை நாம் கேட்டதுண்டு. ஆனால், இன்று இதற்கு மாறாக ஒருவர் அவரை கழுவி ஊத்தியதை கேற்க நேர்ந்தது.
இன்று சென்னை வள்ளூவர் கோட்டத்தில் காவிரி மேலாண்மை அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் நடிகர் நடத்திய போராட்டத்தில் ரஜினி, கமல், விஜய், சூர்யா, விக்ரம், சத்யராஜ், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள்.
அதே சமயம், பிரகாஷ்ராஜ், அர்ஜுன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொள்ளவில்லை. இவர்களில் அஜித்தும் ஒருவர்.
தனது திரைப்படங்களில் நிகழ்ச்சிகளிலேயே பங்கேற்காத அஜித், இதுபோன்ற மக்களுக்காக நடத்தப்படும் போராட்டங்களில் கலந்துக்கொள்வது வழக்கமான ஒன்று என்பதால், நேற்றைய போராட்டத்தில் அவர் நிச்சயம் கலந்துக்கொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அஜித் கடைசி வரை வராதது அனைவருக்கும் ஏமாற்றம் அளித்தது.
அஜித்தை எதிர்ப்பார்த்து ஏமாந்துப் போனவர்களில் ஒருவர், தமிழர்களுக்காக அவரால் வரமுடியாமல் போய்விட்டதா? திருவான்மியூர் வீட்டிலிருந்து போராட்டம் நடக்கும் இடத்திற்கு 12 கிமீ அவரால் பயணம் செய்ய முடியாதா? அவர் வீட்டை விட்டு வரவே மாட்டாரா? என்று திட்டி தீர்த்துவிட்டார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...