கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்த 21 வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வென்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 3 ஆம் இடத்தை பிடித்தது.
இதில், தமிழக பளு தூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம் 77 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதிஷ் சிவலிங்கத்தை அனைவரும் பாராட்டி வரும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சதீஷ்குமாரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும், அவருக்கு பரிசு ஒன்றையும் அவர் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அது என்ன பரிசு என்ற தகவலை இருவரும் வெளியிடவில்லை.
இது குறித்து சதீஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சிறந்த மனிதரை சந்தித்ததில் மகிழ்ச்சி. பதக்கத்துடன் அன்பரை சந்தித்தேன். அவரது அரவணைப்பு மற்றும் வார்த்தைகள் என்னை நிறைய ஊக்கப்படுத்தின. உங்களது அன்பாக பரிசுக்கு நன்றி சிவகார்த்திகேயன், என்று தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்...
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...