’தரமணி’ படத்தில் நடித்து நல்ல பெயர் எடுத்தாலும் ஆண்ட்ரியாவுக்கு பட வாய்ப்புகள் ஏதும் வரவில்லை. இதனால் ரொம்பவே அப்செட்டான ஆண்ட்ரியா, விஜய், அஜித் போன்ற ஹீரோக்களுடன் நடித்தால் தான் நடிகை என்று ஏற்றுக்கொள்வீர்களா? என்று நிகழ்ச்சி ஒன்றில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த இயக்குநர் இயக்கும் புதிய படத்தில் ஆண்ட்ரியா ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘விடியும் முன்’ என்ற படத்தை இயக்கிய பாலாஜி கே.குமார் தான் அந்த இயக்குநர்.
இவர் சென்னை வாசியாக இருந்தாலும், தற்போது அமெரிக்க குடிமகனாக அங்கேயே செட்டிலாகி, அங்குள்ள சினிமாத் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் இயக்கிய முதல் தமிழ்ப் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வரும் இவர், சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் ஒரு படத்தை எடுக்க உள்ளாராம்.
ரசிகர்களை சீட்டின் நுணியில் உட்கார வைக்கும் அளவுக்கு படு சஸ்பென்ஸாக இப்படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் ஆண்டிர்யா ஹீரோயினாகவும், பிரசன்னா ஹீரோவாகவும் நடிக்க உள்ளார்கள். முக்கிய வேடம் ஒன்றில் மடோனா செபாஸ்டியனும் நடிக்கிறாராம்.
வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ள இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை விரைவில் வெளியிட உள்ளார்கள்.
அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்...
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...