ரஜினிகாந்தின் மருமகனான நடிகர் தனுஷின் தந்தையும், திரைப்பட இயக்குநருமான கஸ்தூரிராஜா மீது சென்னையை சேர்ந்த சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா, என்பவர் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். மேலும், ரஜினிகாந்தின் ஒப்புதலுடன் தான் கஸ்தூரிராஜாவுக்கு கடன் கொடுத்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால், இதை மறுத்த ரஜினிகாந்த், தன்னிடம் பணம் பறிக்க முகுந்சந்த் போத்ரா, முயற்சிக்கிறார் என்று கூறியிருந்தார்.
ரஜினிகாந்தின் இந்த குற்றச்சாட்டு தனது நற்பெயருக்கு கலங்கம் விளைவிப்பதாக கூறிய முகுந்த்சந்த் போத்ரா, ரஜினிக்கு எதிராக நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் ஜூன் மாதம் 6 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்...
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...