பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதோடு, ஹாலிவுட் டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
பிரியங்கா சோப்ரா நடித்த ‘குவாண்டிகோ’ என்ற தொடர் அமெரிக்காவில் பெரும் பிரபலமடைந்தது. அதில் அலெக்ஸ் பாரிஷ் என்ற எப்.பி.ஐ அதிகாரியாக அவர் நடிக்கிறார். இந்த தொடரின் 3 வது சீசனின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி பிரியங்கா சோப்ரா படுகாயம் அடைந்துள்ளார். அவரை உடனே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரியங்கா சோப்ரா, தொடர்ந்து படப்பிடிப்புல் கலந்துக்கொள்ளாத நிலைக்கு ஆளாகியுள்ளார். மேலும், அவரை மருத்துவர்கள் ஒரு மாதம் ஓய்வு எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்களாம். அதனால், பிரியங்கா சோப்ரா, தற்போது அந்த தொடரில் நடிப்பதை தவிர்த்துவிட்டு ஓய்வில் இருக்கிறாராம்.
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...