தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான அஜித் மற்றும் விஜய் ஆகியோரது ஒவ்வொரு படங்களின் ரிலீஸையும் அவர்களது ரசிகர்கள் பண்டிகைப் போல கொண்டாடுவார்கள். அவர்களது கொண்டாட்டம் ஒரு பக்கம் இருக்க, மோதலும் மறுபக்கம் கலைகட்டும்.
விஜயை பற்றி அஜித் ரசிகர்கள் மீம்ஸ் போடுவது, அஜித்தை பற்றி விஜய் ரசிகர்கள் மீம்ஸ் போடுவது என்று சமூக வலைதளத்தில் இவர்கள் மோதிக்கொள்ளுவதை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் ஒன்றாக இணைந்திருப்பதை பெரும்பாலானோர் அறிந்திருக்க மாட்டார்கள். அது தான் உண்மை.
விஜய் பிறந்தநாளை அஜித் ரசிகர்கள் கொண்டாடுவதும், அஜித் பிறந்தநாளை விஜய் ரசிகர்கள் கொண்டாடுவதும் ஒரு சில இடங்களில் நடந்துக்கொண்டிருக்கிறது.
அந்த வகையில், கடந்த 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் ஒன்றாக சேர்ந்து சென்னை மயிலாப்பூரில் உள்ள ‘அன்னை இல்லம்’ முதியோர் இல்லத்தில் கொண்டாடியுள்ளார்கள். அங்குள்ள முதியோருக்கு உணவு வழங்கி அவர்களுக்கான உடைகளையும் வழங்கியுள்ளார்கள்.
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...