கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட தேசிய திரைபப்ட விருதுகள் வழங்குவதற்கான விழா இன்று நடைபெற உள்ள நிலையில், நிகழ்ச்சியில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
வழக்கமான தேசிய திரைப்பட விருதுகளை ஜனாதிபதி தான் அனைவருக்கும் வழங்குவார். ஆனால், இந்த முறை அடையாளமாக 11 பேருக்கு மட்டுமே ஜனாதிபதி விருது வழங்குவார் என்றும், மற்றவர்களுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி விருதுகள் வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
விருது குழுவின் இந்த திடீர் முடிவால் விருது வென்றவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து தமிழ் திரைப்பட இயக்குநர் செழியன் உள்ளிட்ட விருது பெற உள்ள 69 பேர் விழாவில் பங்கேற்க போவதில்லை என்று தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில், “தகுந்த நெறிமுறைகளுடன் செயல்படும் தேசிய விருது வழங்கும் விழாவைப் பற்றி உரிய முறையில் எங்களிடம் தெரிவிக்காத நிகழ்வு எங்களை ஏமாற்றியது போல உணரச் செய்துள்ளது. மேலும் தேசிய விருது வழங்கும் விழாவின் 65 வருட பாரம்பரியத்தை சில நிமிடங்களில் கேள்விக்குள்ளாக்கியுள்ளதும் துருதிஷ்டவசமான செயல். எங்கள் மனக்குறையை போக்க ஒரு பதில் கிடைக்காத சூழ்நிலையில் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்க நாங்கள் விரும்பவில்லை. இதற்காக இந்த விழாவை கலைத்துறையினர் புறக்கணிக்கின்றோம் என கருத்தில் கொள்ள தேவையில்லை.” என்று தெரிவித்துள்ளனர்.
ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...
இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பி, வான் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வருணன் - காட் ஆஃப் வாட்டர்’...